என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பந்தலூரில் போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது
Byமாலை மலர்23 Oct 2020 5:42 AM GMT (Updated: 23 Oct 2020 5:42 AM GMT)
பந்தலூரில் போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பந்தலூர்:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு, உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனே அவளை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவள் 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிறுமியிடம் கேட்டபோது, அவளது அக்காள் கணவரான மணிகண்டன்(வயது 38) என்பவர் ஆசை வார்த்தைக்கூறி பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் தேவாலா அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
மற்றொரு சம்பவம்...
இதேபோன்று பந்தலூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, கூடலூரில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று வந்தாள். அப்போது அவளை அதே பகுதியை சேர்ந்த ரமேஷ்(19) என்பவர் ஆசை வார்த்தைக்கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதற்கிடையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அப்போது பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கூடலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, ரமேஷை கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு, உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனே அவளை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவள் 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிறுமியிடம் கேட்டபோது, அவளது அக்காள் கணவரான மணிகண்டன்(வயது 38) என்பவர் ஆசை வார்த்தைக்கூறி பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் தேவாலா அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
மற்றொரு சம்பவம்...
இதேபோன்று பந்தலூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, கூடலூரில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று வந்தாள். அப்போது அவளை அதே பகுதியை சேர்ந்த ரமேஷ்(19) என்பவர் ஆசை வார்த்தைக்கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதற்கிடையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அப்போது பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கூடலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, ரமேஷை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X