என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டாஸ்மாக் நிறுவன ஊழியர் வீட்டில் 22 பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்22 Oct 2020 3:18 AM GMT (Updated: 22 Oct 2020 3:18 AM GMT)
டாஸ்மாக் நிறுவன ஊழியர் வீட்டில் 22 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் சின்னையன் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ். டாஸ்மாக் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இவரும், இவரது மனைவியும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 22 பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரத்தை மர்மநபர் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.
இதுபற்றி காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இரவு நேரத்தில் தெருவில் நடந்து வரும் கொள்ளையன், தெரு நாய்களை துரத்துவதற்காக கற்களை எடுத்து வீசியபடி சகஜமாக செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் சின்னையன் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ். டாஸ்மாக் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இவரும், இவரது மனைவியும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 22 பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரத்தை மர்மநபர் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.
இதுபற்றி காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இரவு நேரத்தில் தெருவில் நடந்து வரும் கொள்ளையன், தெரு நாய்களை துரத்துவதற்காக கற்களை எடுத்து வீசியபடி சகஜமாக செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X