என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொன்னமராவதியில் வங்கி ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று - கிளை அலுவலகம் மூடல்
Byமாலை மலர்20 Oct 2020 9:34 AM GMT (Updated: 20 Oct 2020 9:34 AM GMT)
பொன்னமராவதியில் வங்கி ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால் வங்கி மூடப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 278 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 48 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா சிகிச்சையில் 9 ஆயிரத்து 760 பேர் ‘டிஸ்சார்ஜ்‘ ஆகி உள்ளனர். மாவட்டத்தில் தற்போது கொரோனாவுக்கு 371 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொன்னமராவதியில் உள்ள இந்தியன் வங்கியில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பொன்னமராவதி பேரூராட்சி பணியாளர்கள் மூலம், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நடமாடும் மருத்துவக்குழுவினர்கள், மருத்துவ அலுவலர் ரவிக்குமார் தலைமையில் அங்கு உள்ள ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அங்கு பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வங்கி மூடப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X