search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்  தஞ்சம் அடைந்த காதல் ஜோடி.
    X
    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி.

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சட்டக்கல்லூரி மாணவர் காதலியுடன் தஞ்சம்

    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
    வேலூர்:

    வேலூர் வள்ளலார் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் அஜய் (வயது 22). சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், ஹாஜிராபேகம் என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இருவரும் நேற்று திருமணம் செய்துகொண்டு வேலூரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அஜய் ஒரு மனு கொடுத்துள்ளார்.

    அதில், நான் சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறேன். ஹாஜிராபேகமும், நானும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இதை அறிந்த அவருடைய பெற்றோர், விருப்பம் இல்லாத வேறு நபருக்கு எனது காதலியை திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளனர்.

    இதனால் நாங்கள் இருவரும் மேஜர் என்பதால் சட்டப்படி திருமணம் செய்து கொண்டோம். இதையறிந்த எனது மனைவியின் உறவினர்கள் போனில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×