என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சட்டக்கல்லூரி மாணவர் காதலியுடன் தஞ்சம்
Byமாலை மலர்19 Oct 2020 6:50 AM GMT (Updated: 19 Oct 2020 6:50 AM GMT)
பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
வேலூர்:
வேலூர் வள்ளலார் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் அஜய் (வயது 22). சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், ஹாஜிராபேகம் என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இருவரும் நேற்று திருமணம் செய்துகொண்டு வேலூரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அஜய் ஒரு மனு கொடுத்துள்ளார்.
அதில், நான் சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறேன். ஹாஜிராபேகமும், நானும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இதை அறிந்த அவருடைய பெற்றோர், விருப்பம் இல்லாத வேறு நபருக்கு எனது காதலியை திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளனர்.
இதனால் நாங்கள் இருவரும் மேஜர் என்பதால் சட்டப்படி திருமணம் செய்து கொண்டோம். இதையறிந்த எனது மனைவியின் உறவினர்கள் போனில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X