என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
பேட்டையில் மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தல் - டிரைவர் கைது
பேட்டை அருகே மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேட்டை:
பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் நேற்று பேட்டை இணைப்பு சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது பேட்டையில் இருந்து பழைய பேட்டை நோக்கி சென்ற மினி லாரியை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். அதில், மூட்டைகளில் மொத்தம் 2 டன் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியுடன் மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மினி லாரி டிரைவரான பேட்டை நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த பிச்சையா மகன் மந்திரமூர்த்தியை (வயது 23) போலீசார் கைது செய்தனர்.
Next Story