என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலை அருகே கூலி தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்18 Oct 2020 6:46 AM GMT (Updated: 18 Oct 2020 6:46 AM GMT)
திருவண்ணாமலை அருகே கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை நாவக்கரை காலனியை சேர்ந்தவர் ரெங்கநாதன் (வயது 58) , கூலி தொழிலாளி. இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ரெங்கநாதன் அவர் வசித்து வரும் ஓட்டு வீட்டின் பின்புறம் புதிதாக மாடி வீடு கட்டியுள்ளார். நேற்று முன்தினம் இவர் மது குடித்து விட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து உள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பினார். இரவு ரெங்கநாதன் மட்டும் ஓட்டு வீட்டில் வந்து படுத்து உள்ளார். மற்றவர்கள் மாடி வீட்டில் இருந்தனர்.
இந்த நிலையில் ஓட்டு வீட்டில் இருந்த ரெங்கநாதன் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரெங்கநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X