என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மயிலாடுதுறை அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
Byமாலை மலர்16 Oct 2020 5:09 PM GMT (Updated: 16 Oct 2020 5:09 PM GMT)
மயிலாடுதுறை அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே ஆனதாண்டவபுரம் கீழத்தெருவை சேர்ந்த திருஞானசம்பந்தமூர்த்தி மனைவி சரண்யா (வயது 27). இவர் குடும்பத்தினருடன் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். இரவு 11.30 மணியளவில் கதவு திறந்திருந்த கொள்ளைபுறம் வழியாக மர்மநபர் வீட்டிற்குள் நுழைந்து தூங்கி கொண்டிருந்த சரண்யாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதில் அதிர்ச்சி அடைந்த சரண்யா கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் மர்ம நபரை துரத்தி சென்றனர். ஆனால் மர்மநபரை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X