search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பெருந்துறை அம்மாபேட்டை பகுதியில் விஷம் குடித்து 2 பேர் தற்கொலை

    பெருந்துறை அம்மாபேட்டை பகுதியில் விஷம் குடித்து 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் வசித்து வந்தவர் சுரேஷ் கண்ணன் (வயது 35). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அவருடைய மனைவி சண்முகப்பிரியா அவரிடம் கோபித்துக்கொண்டு சில நாட்களுக்கு முன்பு தேனியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். 

    இதில் மனம் உடைந்த சுரேஷ் கண்ணன், நேற்று முன்தினம் பெருந்துறை அருகே உள்ள துடுப்பதிக்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதுபற்றி அறிந்த அவரது கடை முதலாளி 108 ஆம்புலன்ஸ் மூலம் சுரேஷ் கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுரேஷ் கண்ணன் நேற்று இறந்தார்.
    Next Story
    ×