search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    நெட்டப்பாக்கம் அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

    நெட்டப்பாக்கம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த 10-ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    நெட்டப்பாக்கம்:

    நெட்டப்பாக்கம் அருகே மடுகரை ராம்ஜி நகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 43). டிரைவர். இவரது மகள் தர்ஷிணி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக தர்ஷிணி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாவில்லை.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வயிற்று வலி அதிகமானதால் விரக்தி அடைந்த தர்ஷிணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து மடுகரை புறக்காவல் நிலையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×