என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடும்ப பிரச்சினையில் மாமனார் முதுகில் கத்தியால் குத்திய மருமகன்
Byமாலை மலர்16 Oct 2020 10:23 AM GMT (Updated: 16 Oct 2020 10:23 AM GMT)
குடும்ப பிரச்சினையில் மாமனாரை கத்தியால் குத்திய மருமகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அறந்தாங்கி:
பேராவூரணி அருகே செந்தலைபட்டினத்தை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 60). இவரது மகள் அனீஸ்பாத்திமாவை நாகுடியை சேர்ந்த சர்புதீன் (38) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் ஷாஜகான், தனது மகளை அழைத்து கொண்டு செந்தலைபட்டினத்திற்கு வந்து விட்டார். இந்நிலையில் நேற்று அனீஸ்பாத்திமாவின் பொருட்களை எடுத்து செல்ல ஷாஜகான் நாகுடிக்கு வந்துள்ளார். அப்போது சர்புதீன், தகராறு செய்து கையில் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ஷாஜகான் முதுகில் குத்தினார்.
இதையடுத்து படுகாயமடைந்த ஷாஜகான் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நாகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X