என் மலர்
செய்திகள்

மின்தடை
காரைக்குடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
காரைக்குடி பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
காரைக்குடி:
காரைக்குடி துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காரைக்குடி நகர் பகுதிகள், பேயன்பட்டி, ஹவுசிங் போர்டு, செக்காலைக்கோட்டை, பாரிநகர், கல்லூரி சாலை, செக்காலை சாலை, புதிய பஸ் நிலையம், கல்லுக்கட்டி, பழைய பஸ் நிலையம், கோவிலூர் ரோடு, செஞ்சை, கோவிலூர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
Next Story