என் மலர்
செய்திகள்

தற்கொலை
நீடாமங்கலம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை
நீடாமங்கலம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் ரெயிலடி தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி கலா (வயது55). இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். இந்தநிலையில் நேற்று மாலை கலா தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகி பரிதாபமாக அவர் இறந்தார். தகவலறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story