search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "needamangalam"

    நீடாமங்கலம் அருகே தம்பி மனைவி ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொலை செய்தேன் என்று கைதானவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள மேலாளவந்தசேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் ராஜசேகர். இவர் சிங்கப்பூரில் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், கோட்டூர் அருகே வடக்கு நாணலூர் கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி மகள் எஸ்தருக்கும் (வயது 25) திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 வயதில் ‌ஷர்வன் என்கிற ஆண் குழந்தை உள்ளது.

    கணவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்ததால் தனது குழந்தையுடன் எஸ்தர் தனியாக வசித்து வந்தார்.

    கடந்த 6-ந் தேதி இரவு 7 மணியில் இருந்து திடீரென்று வீட்டில் இருந்த எஸ்தரை காணவில்லை.

    இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த எஸ்தரின் குடும்பத்தினர், பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் காணவில்லை.

    இதையடுத்து ஜோசப் ராஜசேகருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் ஊருக்கு திரும்பி வந்து தேவங்குடி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் நீடாமங்கலம் இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஜோசப்ராஜசேகரின் அண்ணன் விவசாயி நெல்சனின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனால் நெல்சனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் எஸ்தரை துண்டு துண்டாக வெட்டி 2 சாக்கு மூட்டையில் வீசி விட்டதாக தெரிவித்தார். இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அவரை அழைத்து கொண்டு புதர் பகுதியில் 2 சாக்கு மூட்டைகளில் இருந்த எஸ்தரின் உடலை கைப்பற்றினர்.

    இதுகுறித்து தேவங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நெல்சனிடம் மேலும் விசாரணை நடத்தினர். அப்போது தனது நண்பர் சகாயராஜூடன் சேர்ந்து எஸ்தரை கொன்றதாக கூறினார். இதனைத்தொடர்ந்து நெல்சன், நண்பர் சகாயராஜ் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைதான நெல்சன் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    எனது தம்பி ஜோசப்ராஜசேகர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தான். அவனது மனைவி எஸ்தர் மற்றும் குழந்தை ஆகியோர் எனது தந்தை வீட்டில் வசித்து வந்தனர். எனது தந்தை மோசஸ் இறந்து விடவே, தாயார் நட்சத்திரமேரியின் பாதுகாப்பில் எஸ்தரும், அவருடைய குழந்தையும் இருந்தனர்.

    எனது தந்தை இறந்த பின்பு என் தம்பி என்னிடம், இனிமேல் நீதான் எனது மனைவி மற்றும் குழந்தைக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என என்னிடம் கூறி விட்டு வெளிநாடு சென்றான்.

    ஆனால் எஸ்தர் அழகால் எனக்கு காமம் ஏற்பட்டது. வீட்டில் எஸ்தர் தனியாக இருக்கும் போது நான் அடிக்கடி அவரிடம் சென்று பேசுவேன்.

    மேலும் சில நேரங்களில் ஆசைக்கு இணங்கும்படி கூறி வந்தேன். ஆனால் இதற்கு எஸ்தர் உடன்படாமல் என்னை திட்டி பேசி வந்தார். இது நாளடைவில் எனக்கு அவர் மீது கோபத்தை உண்டாக்கியது.

    கடந்த 5-ந் தேதி எனது மனைவி, குழந்தையை வேளாங்கண்ணியில் உள்ள எனது மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்தேன். மறுநாள் 6-ந் தேதி எனது அம்மா நட்சத்திர மேரியை வயலுக்கு அனுப்பி வைத்தேன். அப்போது வீட்டில் தனியாக இருந்த எஸ்தரிடம் சென்று எனது ஆசைக்கு இணங்குமாறு மீண்டும் வற்புறுத்தினேன்.

    அதற்கு எஸ்தர் மறுப்பு தெரிவித்து என்னை கண்டபடி திட்டினார். மேலும் இதுபோல் தொடர்ந்து நடந்தால் எனது கணவரிடம் தெரிவிப்பேன் என்று கூறியதால் எனக்கு ஆத்திரம் வந்தது.

    இந்த வி‌ஷயத்தை எனது தம்பியிடம் அவள் சொல்லி விட்டால் என்னவானது? என்று பயந்தேன். இதனால் எஸ்தரை கொலை செய்து விட வேண்டும் என்று தீர்மானித்தேன். இந்த வி‌ஷயத்தை எனது நண்பன் சகாயராஜிடம் தெரிவித்தேன். அவனும் இதற்கு உடன்பட்டான். எனவே இருவரும் சேர்ந்து எஸ்தரை தீர்த்துக்கட்டும் முடிவுக்கு வந்தோம்.

    சம்பவத்தன்று வீட்டில் எஸ்தர் தனியாக இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எஸ்தரை நானும் எனது நண்பர் சகாயராஜூம் சென்றோம்.

    எங்கள் இருவரையும் பார்த்த எஸ்தர் திடுக்கிட்டு சத்தம் போட்டார். உடனே வேகமாக சென்று எஸ்தரின் வாயை நான் பொத்தினேன். சகாயராஜ் கத்தியால் எஸ்தரின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்தம் பீறிட்டு கீழே மயங்கி விழுந்து எஸ்தர் இறந்தார்.

    அதனைத்தொடர்ந்து கத்தி மற்றும் அரிவாளால் உடலை இரண்டு துண்டாக்கினோம். 2 கால்களின் முட்டிகளை மட்டும் தனியாக வெட்டினோம். கைகள் இரண்டையும் தனியாக வெட்டினோம். உடல் முழுவதும் ரத்தமாக இருந்ததால் தண்ணீரால் ரத்தத்தை நன்றாக கழுவினோம். பின்னர் வீடு முழுவதும் இருந்த ரத்தக்கறையை தண்ணீரால் கழுவினோம். 2 சாக்கு மூட்டைகளில் எஸ்தரின் உடலை கட்டி மொபட்டில் வைத்து அருகில் உள்ள கோரையாற்று புதரில் போட்டு விட்டு வீடு திரும்பினோம். சகாயராஜ் அங்கிருந்து சென்று விட்டார்.

    இந்த நிலையில் எஸ்தர் மாயமானது பற்றி எனது தாயார் கேட்டார். அதற்கு பதில் சொல்லவில்லை. தொடர்ந்து என்னிடம் எஸ்தர் குறித்து கேட்டபோது நான் எஸ்தரை கொலை செய்து உடலை ஆற்றில் வீசிவிட்டேன் என்று கூறினேன்.

    இதை கேட்டு உறவினர்கள் எல்லோரும் போலீசில் புகார் செய்தனர். அதன்பிறகு நடத்திய விசாரணையில் நான் சிக்கி கொண்டேன்.

    இவ்வாறு நெல்சன், போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ×