என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலி
    X
    மின்சாரம் தாக்கி பலி

    கீழ்வேளூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

    கீழ்வேளூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் அருகே குருக்கத்தி பள்ளிசத்தம் பகுதியை சேர்ந்த ரெங்கசாமி மகன் ராஜசேகர் (வயது 23). இவர், நாகை ரெயில் நிலைய குட்ஷெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று ராஜசேகர், கூத்தூர் ரெயில் நிலையத்தில் உள்ள மின் கம்பத்தில் ஏறி மின்சார ரெயிலுக்கு செல்லும் மின் கம்பியை பிடித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாகை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×