என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நாராயணசாமி மீது தேச துரோக வழக்கு- கவர்னர் கிரண்பேடியிடம் புதுவை பா.ஜனதா மனு அளிக்க முடிவு
புதுச்சேரி:
உத்தரபிரதேசத்தில் தலித் இளம்பெண் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், புதுவை மாநில மகிளா காங்கிரசார் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசும்போது, “புதுவையை தமிழகத்துடன் இணைக்க பா.ஜனதா முயற்சிக்கிறது என்றும், அதனை நாம் ஒருங்கினைந்து முறியடிக்க வேண்டும் என கூறினார்.
இதற்கு புதுவை பா.ஜனதா முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பொய்யான அவதூறு செய்தியை பரப்பி புதுவையை கலவர பூமியாக மாற்ற நினைக்கிறார் என பா.ஜனதா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பா.ஜனதா மாநிலப் பொதுசெயலாளர் ஏம்பலம் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்தியில் ஆளுகின்ற பாரதிய ஜனதா கட்சி அரசு புதுவை மாநிலத்தை தமிழகத்தோடு இணைப்பதற்காக முயற்சி மேற்கொள்வதாக ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி அவதூறை முதல்- அமைச்சர் நாராயணசாமி பரப்பியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் அரசு புதுவை மாநிலத்தை தமிழகத்தோடு இணைக்கும் முயற்சி மேற்கொண்ட போது மக்கள் மிகப்பெரிய எழுச்சி போராட்டம் நடத்தி அதை தடுத்து நிறுத்தினார்கள்.
இந்த நிலையில் மக்கள் மத்தியில் பொய்யான அவதூறு செய்தியை பரப்பி புதுவையை கலவர பூமியாக மாற்ற நினைக்கின்ற புதுவையை ஆளும் முதல்- அமைச்சர் நாராயணசாமி மீது தேச விரோத வழக்கு பதிவு செய்ய மத்திய அரசுக்கு கவர்னர் பரிந்துரை செய்ய நாளை (வியாழக்கிழமை) பாரதீய ஜனதா சார்பில் ஊர்வலமாக சென்று கவர்னரை சந்தித்து மனு தர உள்ளோம்.
சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் வகையில் தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கு ஏதிராக பேசி வரும் நாராயணசாமி அரசை பதவி நீக்கம் செய்து புதுவை அரசை மத்திய அரசின் கீழ் கொண்டுவந்து புதுவை மக்களையும், சட்ட ஒழுங்கையும் காப்பற்ற வலியுறுத்த உள்ளோம்.
இவ்வாறு ஏம்பலம் செல்வம் அறிக்கையில் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்