search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயணசாமி
    X
    நாராயணசாமி

    நாராயணசாமி மீது தேச துரோக வழக்கு- கவர்னர் கிரண்பேடியிடம் புதுவை பா.ஜனதா மனு அளிக்க முடிவு

    முதல் அமைச்சர் நாராயணசாமி மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய கவர்னர் கிரண்பேடியிடம் புதுவை பா.ஜனதா மனு அளிக்க முடிவு செய்துள்ளது.

    புதுச்சேரி:

    உத்தரபிரதேசத்தில் தலித் இளம்பெண் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், புதுவை மாநில மகிளா காங்கிரசார் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

    ஊர்வலத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசும்போது, “புதுவையை தமிழகத்துடன் இணைக்க பா.ஜனதா முயற்சிக்கிறது என்றும், அதனை நாம் ஒருங்கினைந்து முறியடிக்க வேண்டும் என கூறினார்.

    இதற்கு புதுவை பா.ஜனதா முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பொய்யான அவதூறு செய்தியை பரப்பி புதுவையை கலவர பூமியாக மாற்ற நினைக்கிறார் என பா.ஜனதா தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து பா.ஜனதா மாநிலப் பொதுசெயலாளர் ஏம்பலம் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்தியில் ஆளுகின்ற பாரதிய ஜனதா கட்சி அரசு புதுவை மாநிலத்தை தமிழகத்தோடு இணைப்பதற்காக முயற்சி மேற்கொள்வதாக ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி அவதூறை முதல்- அமைச்சர் நாராயணசாமி பரப்பியுள்ளார்.

    முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் அரசு புதுவை மாநிலத்தை தமிழகத்தோடு இணைக்கும் முயற்சி மேற்கொண்ட போது மக்கள் மிகப்பெரிய எழுச்சி போராட்டம் நடத்தி அதை தடுத்து நிறுத்தினார்கள்.

    இந்த நிலையில் மக்கள் மத்தியில் பொய்யான அவதூறு செய்தியை பரப்பி புதுவையை கலவர பூமியாக மாற்ற நினைக்கின்ற புதுவையை ஆளும் முதல்- அமைச்சர் நாராயணசாமி மீது தேச விரோத வழக்கு பதிவு செய்ய மத்திய அரசுக்கு கவர்னர் பரிந்துரை செய்ய நாளை (வியாழக்கிழமை) பாரதீய ஜனதா சார்பில் ஊர்வலமாக சென்று கவர்னரை சந்தித்து மனு தர உள்ளோம்.

    சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் வகையில் தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கு ஏதிராக பேசி வரும் நாராயணசாமி அரசை பதவி நீக்கம் செய்து புதுவை அரசை மத்திய அரசின் கீழ் கொண்டுவந்து புதுவை மக்களையும், சட்ட ஒழுங்கையும் காப்பற்ற வலியுறுத்த உள்ளோம்.

    இவ்வாறு ஏம்பலம் செல்வம் அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×