search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கடலூர் முதுநகர் அருகே கார் மோதி தொழிலாளி பலி

    கடலூர் முதுநகர் அருகே கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் முதுநகர்:

    கடலூர் முதுநகர் அருகே உள்ள சேடப்பாளையத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 55). இவர் அதே பகுதியில் உள்ள உரக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் கடையில் இருந்து வீட்டுக்கு சாப்பிட சென்றார். பின்னர் சாப்பிட்டு விட்டு மீண்டும் கடைக்கு கடலூர்-விருத்தாசலம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக புருஷோத்தமன் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டதில் அவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி புருஷோத்தமன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகள் புவனேஸ்வரி, கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×