என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இதுவரை 1 லட்சம் கொரோனா பரிசோதனை
Byமாலை மலர்3 Oct 2020 10:41 AM GMT (Updated: 3 Oct 2020 10:41 AM GMT)
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இதுவரை 1 லட்சம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்த 100 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் சராசரி எண்ணிக்கை 150-ல் இருந்து 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. பொதுமக்கள் கொரோனா நோய் தொற்று தினசரி பரிசோதனைகளின் சராசரி எண்ணிக்கை 2 ஆயிரத்தில் இருந்து 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கென பிரத்யேகமான நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம் செயல்பட்டு வருகிறது. புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தினசரி பரிசோதனை திறன் 2,500 மாதிரிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. நோய் பாதித்தவர்களை காலதாமதமின்றி கண்டறியும் வகையில் 113 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவும் தினமும் 2 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தி வருகின்றனர்.
தினசரி சராசரியாக 3 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 லட்சத்து 12 பேருக்கு காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 12,793 பேருக்கு சளி, காய்ச்சலுடன் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா மாதிரி சேகரித்து பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 1 லட்சம் எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல கொரோனா பாதித்த 100 கர்ப்பிணிகளுக்கு இதுவரை உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு தாய்சேய் முழு நலத்துடன் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் சராசரி எண்ணிக்கை 150-ல் இருந்து 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. பொதுமக்கள் கொரோனா நோய் தொற்று தினசரி பரிசோதனைகளின் சராசரி எண்ணிக்கை 2 ஆயிரத்தில் இருந்து 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கென பிரத்யேகமான நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம் செயல்பட்டு வருகிறது. புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தினசரி பரிசோதனை திறன் 2,500 மாதிரிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. நோய் பாதித்தவர்களை காலதாமதமின்றி கண்டறியும் வகையில் 113 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவும் தினமும் 2 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தி வருகின்றனர்.
தினசரி சராசரியாக 3 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 லட்சத்து 12 பேருக்கு காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 12,793 பேருக்கு சளி, காய்ச்சலுடன் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா மாதிரி சேகரித்து பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 1 லட்சம் எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல கொரோனா பாதித்த 100 கர்ப்பிணிகளுக்கு இதுவரை உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு தாய்சேய் முழு நலத்துடன் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X