search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    திருப்புவனம் அருகே கத்தியை காட்டி செல்போன் பறிப்பு- 2 பேர் கைது

    திருப்புவனம் அருகே கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தர்.
    திருப்புவனம்:

    திருப்புவனம் அருகே உள்ள கீழப்பூவந்தி பகுதியை சேர்ந்தவர் ராமு(வயது 22). இவர் மதுரை ரோட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலைக்கு சென்றபோது அ.வெள்ளக்கரை கிராமத்தை சேர்ந்த கருப்புராஜா(24), ராஜா(19) ஆகிய இருவரும் ராமுவிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்தனர். 

    இச்சம்பவம் குறித்து ராமு பூவந்தி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்குபதிவு செய்து கருப்புராஜா, ராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.
    Next Story
    ×