search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலி
    X
    மின்சாரம் தாக்கி பலி

    நாகையில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

    நாகையில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகையை அடுத்த பாப்பாகோவில் ஏறும் சாலை அருகே சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் மின்சாரம் தாக்கி 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சபரிநாதன், நாகை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்தவர் அந்த பகுதியில் கிடக்கும் குப்பைகள் சேரிப்பவர் என்பது தெரிய வந்தது. அதே நேரத்தில் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×