என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குன்னூரில் அம்மா நகரும் ரேசன் கடை- கலெக்டர் தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்26 Sep 2020 10:23 AM GMT (Updated: 26 Sep 2020 10:23 AM GMT)
நீலகிரி மாவட்டம் குன்னூர் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு நீலகிரி கூட்டுறவு நிறுவனம் சார்பில் அம்மா நகரும் ரேசன் கடையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி அம்மா நகரும் ரேசன் கடையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூர் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு நீலகிரி கூட்டுறவு நிறுவனம் சார்பில் அம்மா நகரும் ரேசன் கடையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி அம்மா நகரும் ரேசன் கடையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் ரேசன் அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மாநிலம் முழுவதும் 3501 அம்மா நகரும் ரேஷன் கடைகள் ரூ.9, 66 கோடி மதிப்பீட்டில் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் 11 அம்மா நகரும் ரேசன் கடைகள் செயல்படுத்தப்பட உள்ளது.குன்னூர் தாலுகாவில் செயல்பட்டு வரும் பாரத் நகர் ரேசன் கடையை தாய் கடையாக கொண்டு பாரஸ்ட்டேல் அம்மா நகரும் ரேசன் கடை தொடங்கி வைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பாரஸ்ட்டேல், சண்முகாநகர் பகுதிகளை சேர்ந்த 99 ரேசன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள். இந்த ரேசன் கடையில் மாதத்தில் முதல் சனிக்கிழமை மற்றும் 3-வது சனிக்கிழமைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது.இதர பகுதிகளில் மேலும் 10 அம்மா நகரும் ரேசன் கடைகள் தொடங்கப்பட்டு, ரேசன் அட்டை வைத்திருக்கும் ரேசன் அட்டைதாரர்கள் வசிக்கும் இடங்களுக்கு சென்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும். குறிப்பிட்ட நாட்களில் அத்தியாவசிய பொருட்கள் பெற இயலாத அட்டைதாரர்கள் அம்மா நகரும் ரேசன் கடை உடன் இணைக்கப்பட்ட தாய் கடையில் அத்தியாவசிய பொருட்களை பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் சப்-கலெக்டர்கள் ரஞ்சித்சிங், மோனிகா, சாந்தி ராமு எம்.எல்.ஏ., பொது வினியோக திட்ட துணை பதிவாளர் கணபதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வினோத் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X