என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரைக்குடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
Byமாலை மலர்24 Sep 2020 12:21 PM GMT (Updated: 24 Sep 2020 12:21 PM GMT)
காரைக்குடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 650 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை:
சிவகங்கை குடிமைப்பொருள் பறக்கும் படை வட்டாட்சியர் தமிழரசன் மற்றும் துணை வட்டாட்சியர் சேகர் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் காரைக்குடி பகுதியில் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்குடி, செக்காலை டவுன் கருப்பர் கோவில் அருகில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது அவர்களுக்கு தெரியவந்தது.
இதையடுத்து அந்த வீட்டை சுற்றி வளைத்த அதிகாரிகள் உள்ளே புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு 650 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறக்கும் படை குழுவினர் கைப்பற்றினர்.
இது தொடர்பாக குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அரிசி கடத்தலில் ஈடுபட்ட ராஜ்குமார் என்பவரை கைது செய்தனர்.
மேலும் பறக்கும் படை வட்டாட்சியர் தமிழரசன் கூறியதாவது, பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசி, கோதுமை, மண்எண்ணெய், துவரம் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்களை கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோன்ற கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது பறக்கும் படை குழுவினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X