என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காட்பாடி அருகே இளம்பெண் தற்கொலை- போலீசார் விசாரணை
Byமாலை மலர்22 Sep 2020 10:20 AM GMT (Updated: 22 Sep 2020 10:20 AM GMT)
காட்பாடி அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலூர்:
காட்பாடி அருகே உள்ள காசிக்குட்டை குமரன் நகரை சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மகள் மேனகா (வயது 16). நேற்று காலை 10 மணியளவில் வீட்டின் அருகேயுள்ள 60 அடி அழமுள்ள கிணற்றில் மேனகா திடீரென குதித்துள்ளார். சத்தம் கேட்டு அங்கு வந்த பெற்றோர் மற்றும் அக்கம், பக்கத்தினர் மேனகாவை காப்பாற்ற முயன்றனர். ஆனால் படிக்கட்டு இல்லாததால் அவர்களால் கிணற்றில் இறங்க முடியவில்லை.
இதுகுறித்து காட்பாடி தீயணைப்புத்துறையினருக்கும், விருதம்பட்டு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று கயிறு கட்டி கிணற்றின் உள்ளே இறங்கி தேடினர். சிறிது நேரத்துக்கு பின்னர் மேனகாவை பிணமாக மீட்டனர். போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், மேனகாவை அவருடைய தாயார் திட்டியதால் மனமுடைந்து காணப்பட்டதாகவும், அதனால் அவர் கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்தது. இதுதொடர்பாக மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காட்பாடி அருகே உள்ள காசிக்குட்டை குமரன் நகரை சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மகள் மேனகா (வயது 16). நேற்று காலை 10 மணியளவில் வீட்டின் அருகேயுள்ள 60 அடி அழமுள்ள கிணற்றில் மேனகா திடீரென குதித்துள்ளார். சத்தம் கேட்டு அங்கு வந்த பெற்றோர் மற்றும் அக்கம், பக்கத்தினர் மேனகாவை காப்பாற்ற முயன்றனர். ஆனால் படிக்கட்டு இல்லாததால் அவர்களால் கிணற்றில் இறங்க முடியவில்லை.
இதுகுறித்து காட்பாடி தீயணைப்புத்துறையினருக்கும், விருதம்பட்டு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று கயிறு கட்டி கிணற்றின் உள்ளே இறங்கி தேடினர். சிறிது நேரத்துக்கு பின்னர் மேனகாவை பிணமாக மீட்டனர். போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், மேனகாவை அவருடைய தாயார் திட்டியதால் மனமுடைந்து காணப்பட்டதாகவும், அதனால் அவர் கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்தது. இதுதொடர்பாக மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X