என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.37¾ லட்சம் மோசடி செய்தவர் கைது
Byமாலை மலர்9 Sep 2020 10:53 AM GMT (Updated: 9 Sep 2020 10:53 AM GMT)
மதுரையில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.37¾ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:
மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 37). இவர் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
மேலப்பொன்னகரம் சண்முநாதநாதன் முதலாவது தெருவை சோந்தவர் பாண்டியராஜ், அவரது நண்பர் ஆரப்பாளையத்தை சேர்ந்த தேவநாராயணன் ஆகிய இருவரும் என்னை சந்தித்தனர். சென்னையில் அரசு அதிகாரிகள் பலரிடம் பழக்கம் உண்டு. அவர்கள் மூலம் இந்து அறநிலையத்துறை, மின்சார வாரியம், வனத்துறையில் யாருக்கு வேண்டுமானாலும் அரசு வேலை வாங்கி தர முடியும் என்று என்னிடம் கூறினர். அதனை நம்பி நான், எனது உறவினர்கள், நண்பர்கள் என பலரிடமும் 37 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வசூல் செய்து அவர்களிடம் கொடுத்தேன். பணத்தை வாங்கி கொண்டு அவர்கள் இதுநாள் வரை அரசு வேலை வாங்கி தரவில்லை.
எனவே நான் பணத்தை திரும்பி தருமாறு கேட்டேன். ஆனால் அவர்கள் பணத்தை தரமறுத்து எனக்கு மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் புகாரில் கூறியிருந்தார்.
அந்த புகாரின் பேரில் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜை கைது செய்தனர். அதை தொடர்ந்து தலைமறைவான தேவநாராயணனை தேடி வருகின்றனர்.
மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 37). இவர் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
மேலப்பொன்னகரம் சண்முநாதநாதன் முதலாவது தெருவை சோந்தவர் பாண்டியராஜ், அவரது நண்பர் ஆரப்பாளையத்தை சேர்ந்த தேவநாராயணன் ஆகிய இருவரும் என்னை சந்தித்தனர். சென்னையில் அரசு அதிகாரிகள் பலரிடம் பழக்கம் உண்டு. அவர்கள் மூலம் இந்து அறநிலையத்துறை, மின்சார வாரியம், வனத்துறையில் யாருக்கு வேண்டுமானாலும் அரசு வேலை வாங்கி தர முடியும் என்று என்னிடம் கூறினர். அதனை நம்பி நான், எனது உறவினர்கள், நண்பர்கள் என பலரிடமும் 37 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வசூல் செய்து அவர்களிடம் கொடுத்தேன். பணத்தை வாங்கி கொண்டு அவர்கள் இதுநாள் வரை அரசு வேலை வாங்கி தரவில்லை.
எனவே நான் பணத்தை திரும்பி தருமாறு கேட்டேன். ஆனால் அவர்கள் பணத்தை தரமறுத்து எனக்கு மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் புகாரில் கூறியிருந்தார்.
அந்த புகாரின் பேரில் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜை கைது செய்தனர். அதை தொடர்ந்து தலைமறைவான தேவநாராயணனை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X