search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    உடன்குடி-களக்காட்டில் இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை

    உடன்குடி, களக்காட்டில் இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்செந்தூர்:

    உடன்குடி அருகே உள்ள கந்தபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகள் இசக்கியம்மாள்(வயது 18). இவர் பெங்களூரில் உள்ள ஒரு மிட்டாய் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். சமீபத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கந்தபுரத்துக்கு வந்துள்ளார். சில நாட்களாக இவருக்கு கை பகுதியில் கட்டி இருந்துள்ளது. இதை ஆபரேசன் செய்து அகற்ற வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.

    இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த இசக்கியம்மாள் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மெஞ்ஞானபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்ப இடத்திற்கு விரைந்து சென்று இசக்கியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மற்றொரு சம்பவம்...

    களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி அடுத்துள்ள ராஜபுதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 24). இவருக்கும் வள்ளியூர் அருகே உள்ள ஆ.திருமலாபுரத்தை சேர்ந்த பிரியங்கா (22) என்பவருக்கும் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுடலைமுத்து தனது மனைவி மற்றும் தாயார் சந்திரகனியுடன் வசித்து வந்தார்.

    பணகுடி அருகே உள்ள தண்டையார்குளத்தில் உள்ள ஒரு கடையில் ஊழியராக பணி புரிந்து வந்தார். அவரது தாயார் சந்திரகனிக்கும் சரியாக காது கேட்காது. இதனால் சுடலைமுத்துக்கும், சந்திரகனிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். அதுபோல கடந்த 30-ந் தேதி மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மனவேதனை அடைந்த சுடலைமுத்து வி‌ஷம் குடித்து வீட்டில் மயங்கினார். இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    Next Story
    ×