search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வில்லியனூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    வில்லியனூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே உறுவையாறு செல்வா நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் ராதிகா (வயது 24). இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக ராதிகா உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று முன்தினம் காலை தனது அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இது குறித்து அவரது தாயார் ரங்கபுஷ்ப காந்தி மங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×