என் மலர்
செய்திகள்

முக ஸ்டாலின்
நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை மறைப்பு- முக ஸ்டாலின் குற்றச்சாட்டு
நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை மறைக்கப்பட்டுள்ளது என்று முக ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை:
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கொரோனாவால் பாதிக்கப்பட்டு நெல்லை மாவட்டத்தில் மட்டும் 182 பேர் இறந்ததாக அரசு சொல்கிறது. ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்படி 285 பேர் இறந்துள்ளார்கள். 103 உயிரிழப்புகள் மறைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. அரசு மரணங்களைக் குறைத்துக்காட்டி மகுடம் சூட்டிக்கொள்ள நினைக்கிறது.
சென்னையில் மறைக்கப்பட்ட மரணங்களுக்கே இன்னும் விளக்கம் வரவில்லை. அடுத்து நெல்லை அதிர்ச்சி தந்துள்ளது. உயிரோடு விளையாட வேண்டாம். உண்மை நிலையை மொத்தமாக வெளியிடுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story