என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும்- கே.வி.தங்கபாலு
Byமாலை மலர்5 Sep 2020 8:26 AM GMT (Updated: 5 Sep 2020 8:26 AM GMT)
காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் மீண்டும் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கூறினார்.
சென்னை:
வ.உ.சி. பிறந்தநாளையொட்டி சென்னையில் அவரது சிலைக்கு தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் திடீர் மறைவு மிகப்பெரிய பேரிழப்பு. அந்த தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.
காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் மீண்டும் அந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும். வேட்பாளர் யார் என்பதையெல்லாம் கட்சி மேலிடம்தான் தேர்வு செய்து உரிய நேரத்தில் அறிவிக்கும்.
தமிழகத்தில் காலியாக இருக்கும் சட்டமன்ற தொகுதிகளுக்கு பொதுத்தேர்தலுடன் சேர்த்தே தேர்தல் நடத்துவது தான் நல்லது. ஏனெனில் வருகிற நவம்பர் மாதம் இடைத்தேர்தலை நடத்தினால் மீண்டும் ஓரிரு மாதங்களில் பொதுத்தேர்தல் வர உள்ளது.
எனவே அது அரசுக்கும் வேட்பாளர்களுக்கும் வீண் செலவையும், சிரமத்தையும்தான் கொடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வ.உ.சி. பிறந்தநாளையொட்டி சென்னையில் அவரது சிலைக்கு தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் திடீர் மறைவு மிகப்பெரிய பேரிழப்பு. அந்த தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.
காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் மீண்டும் அந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும். வேட்பாளர் யார் என்பதையெல்லாம் கட்சி மேலிடம்தான் தேர்வு செய்து உரிய நேரத்தில் அறிவிக்கும்.
தமிழகத்தில் காலியாக இருக்கும் சட்டமன்ற தொகுதிகளுக்கு பொதுத்தேர்தலுடன் சேர்த்தே தேர்தல் நடத்துவது தான் நல்லது. ஏனெனில் வருகிற நவம்பர் மாதம் இடைத்தேர்தலை நடத்தினால் மீண்டும் ஓரிரு மாதங்களில் பொதுத்தேர்தல் வர உள்ளது.
எனவே அது அரசுக்கும் வேட்பாளர்களுக்கும் வீண் செலவையும், சிரமத்தையும்தான் கொடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X