search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    நெல்லை மாவட்டத்தில் குடும்ப பிரச்சினையில் 4 பேர் தற்கொலை

    நெல்லை மாவட்டத்தில் குடும்ப பிரச்சினையில் 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள ஜமீன் சிங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காந்தி (வயது54), தொழிலாளி. இவர் அடிக்கடி மது குடித்து வந்ததால் வயிற்று வலி ஏற்பட்டது.

    இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்தது. இதில் மனமுடைந்த காந்தி வி‌ஷம் குடித்தார். அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    இதுகுறித்து கல்லிடைக் குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிங்கை அருகே உள்ள கோடாரங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (57). இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை எடுத்தும் சரியாக வில்லை. இதனால் மனமுடைந்த ஆறுமுகம் வி‌ஷம் குடித்தார். அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    பணகுடி அருகே உள்ள பழவூர் பகுதியை சேர்ந்தவர் ரவி (43). இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இவரது மனைவி 6 மாதத்திற்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதில் மனமுடைந்த ரவி நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விஜயநாராயணம் அருகே உள்ள சடையநேரி கிராமத்தை சேர்ந்தவர் துரைமுத்து. இவரது மனைவி வடிவு அம்மாள் (70). இவர் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×