search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காவேரிப்பட்டணம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காவேரிப்பட்டணம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே கருக்கன்சாவடியை சேர்ந்தவர் உதயன்னன் (வயது 60). இவர் சாப்பர்த்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணம் கையாடல் செய்த சம்பவத்தில் கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அதே சங்கத்தில் மீண்டும் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் தனது பாட்டி வீட்டில் வசித்து வரும் 17 வயது சிறுமியை மிரட்டி கடந்த ஒரு ஆண்டாக உதயன்னன் பாலியல் வன்கொடுமை செய்து வந்தார். இதனால் கர்ப்பம் ஆன அந்த சிறுமி அச்சத்தின் காரணமாக இதுகுறித்து வெளியில் சொல்லாமல் இருந்து வந்தார். மேலும் சிறுமியின் பாட்டி வயிற்றில் கட்டி பிரச்சினை இருக்கலாம் என்று இதனை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்படவே அவரை காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் அழைத்து சென்று பரிசோதனை செய்ததில் சிறுமி 8 மாதம் கர்ப்பிணியாக உள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து ஊர் பொதுமக்கள் சார்பில் சிறுமியிடம் விசாரித்ததில் உதயன்னன் அச்சுறுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக பொதுமக்கள் உதயன்னனை பிடித்து காவேரிப்பட்டணம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயன்னனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×