என் மலர்
செய்திகள்

ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 9 பெண்கள் உள்பட 29 அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கருத்தில் கொள்ளாமல் ஊரக வளர்ச்சி துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பசுமை வீடுகள் திட்டங்களை விரைந்து முடிக்க நிர்ப்பந்திப்பதை கைவிட வேண்டும்.
முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் மீது பிறப்பிக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பெறப்பட்ட ஆணையை உடனே அமல்படுத்த வேண்டும்.
உதவி இயக்குனர் நிலை, பதவி உயர்வு ஆணை வழங்க வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள் மீது எழுபப்பட்ட 17 குற்ற குறிப்பாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தை விளக்கி வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜூ, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், ஊராட்சி செயலாளர்கள் நாகராஜன், தங்கராசு உள்பட பலர் பேசினர். போராட்டம் இன்று வரை தொடரும் என்று தெரிவித்தனர்.
இதேபோல் மயிலாடுதுறை ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 600-க்கும் மேற்பட்டோர் பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை முன்னிட்டு காலையில் அலுவலகத்துக்கு வந்த ஊழியர்கள் பணியில் ஈடுபடாமல் இருக்கையில் அமர்ந்திருந்தனர். இந்த போராட்டத்தால் ஒன்றிய அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது.






