என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
4-வது முறையாக புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா பரிசோதனை
Byமாலை மலர்24 Aug 2020 8:57 PM GMT (Updated: 24 Aug 2020 8:57 PM GMT)
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு 4-வது முறையாக கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியின் உதவியாளர் பிரபு. இவருக்கு நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் முதல்-அமைச்சர் நாராயணசாமியுடனே எப்போதும் இருப்பார். எனவே முதல்-அமைச்சர் நாராயணசாமியையும் தொற்று பரிசோதனை மேற்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அவரது அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் என 20 பேர் நேற்று புதுவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனோ வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொண்டனர்.
முதல்-அமைச்சர் நாராயணசாமி ஏற்கனவே 3 முறை தொற்று பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதாவது தொடக்கத்தில் தொற்று பரவ தொடங்கியபோது சட்டமன்ற வளாகத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது முதல் முறையாக அவர் பரிசோதனை மேற்கொண்டார்.
அதன்பின் முதல்-அமைச்சர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டபோதும், கடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.எஸ்.ஜே.ஜெயபாலுக்கு தொற்று ஏற்பட்டபோதும் முதல்-அமைச்சர் நாராயணசாமி பரிசோதனை மேற்கொண்டார். தற்போது 4-வது முறையாக பரிசோதனை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியின் உதவியாளர் பிரபு. இவருக்கு நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் முதல்-அமைச்சர் நாராயணசாமியுடனே எப்போதும் இருப்பார். எனவே முதல்-அமைச்சர் நாராயணசாமியையும் தொற்று பரிசோதனை மேற்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அவரது அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் என 20 பேர் நேற்று புதுவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனோ வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொண்டனர்.
முதல்-அமைச்சர் நாராயணசாமி ஏற்கனவே 3 முறை தொற்று பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதாவது தொடக்கத்தில் தொற்று பரவ தொடங்கியபோது சட்டமன்ற வளாகத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது முதல் முறையாக அவர் பரிசோதனை மேற்கொண்டார்.
அதன்பின் முதல்-அமைச்சர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டபோதும், கடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.எஸ்.ஜே.ஜெயபாலுக்கு தொற்று ஏற்பட்டபோதும் முதல்-அமைச்சர் நாராயணசாமி பரிசோதனை மேற்கொண்டார். தற்போது 4-வது முறையாக பரிசோதனை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X