என் மலர்
செய்திகள்

கைது
தாம்பரத்தில் பட்டப்பகலில்வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற 2 பேர் கைது
தாம்பரத்தில் பட்டப்பகலில்வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசிராணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் லட்சுமி நகர் 2-வது தெருவில் வசிப்பவர் சீனிவாசன். பட்டப்பகலில் இவரது வீட்டின் பூட்டை 2 பேர் பூட்டை உடைக்கும் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுச்சென்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த பீர்க்கன்காரணை போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர் ஒருவர் பட்டப்பகலில் சீனவாசன் வீட்டின் பூட்டை சிறிய கடப்பாரையால் உடைக்க முயற்சி செய்கிறார். நீண்டநேரம் முயற்சி செய்தும் பூட்டை உடைக்க முடியாமல் திணறும் அவர், பொதுமக்கள் சத்தம்கேட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விடுவது தெரிந்தது.
இதற்கிடையில் திருடர்கள் விட்டுச்சென்ற இருசக்கர வாகனத்தை எடுக்க வந்த அவர்களது நண்பரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் அளித்த தகவலின்பேரில் அம்பத்தூரை சேர்ந்த பழைய குற்றவாளி கலைச்செல்வன்(வயது 29), அவரது கூட்டாளியான எண்ணூரைச் சேர்ந்த பாபி என்ற சஞ்சய்(21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் கலைச்செல்வன், கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பாக திருட்டு வழக்கில் சிறைக்கு சென்று வந்தது தெரிந்தது.
Next Story






