என் மலர்
செய்திகள்

கைது
பவானி வட்டார கல்வி அலுவலகத்தில் மடிக்கணினி திருடிய வாலிபர் கைது
பவானி வட்டார கல்வி அலுவலகத்தில் மடிக்கணினி திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
பவானி:
பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வட்டார கல்வி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் கடந்த 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றப்பட்டது. அதன்பின்னர் அலுவலகத்தின் கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். சம்பவத்தன்று காலை ஊழியர் ஒருவர் வேலைக்காக வந்து பார்த்தார். அப்போது அலுவலகத்தின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த மடிக்கணினி, 5 மானிட்டர்கள், 2 சி.பி.யு., உள்ளிட்ட பல பொருட்களை காணவில்லை. யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தொடக்க கல்வி அலுவலர் முத்து பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். விசாரணையில் பவானி வர்ணபுரத்தை சேர்ந்த குருமூர்த்தி (வயது 24) என்பவர் அலுவலகத்தின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த மடிக்கணினி, மானிட்டர், சி.பி.யு. உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வட்டார கல்வி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் கடந்த 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றப்பட்டது. அதன்பின்னர் அலுவலகத்தின் கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். சம்பவத்தன்று காலை ஊழியர் ஒருவர் வேலைக்காக வந்து பார்த்தார். அப்போது அலுவலகத்தின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த மடிக்கணினி, 5 மானிட்டர்கள், 2 சி.பி.யு., உள்ளிட்ட பல பொருட்களை காணவில்லை. யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தொடக்க கல்வி அலுவலர் முத்து பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். விசாரணையில் பவானி வர்ணபுரத்தை சேர்ந்த குருமூர்த்தி (வயது 24) என்பவர் அலுவலகத்தின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த மடிக்கணினி, மானிட்டர், சி.பி.யு. உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story