search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

    காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த மாகரல் கிராமம் மேட்டுதெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 75). இவர் மாகரல் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஆனந்தன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை உடனடியாக சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து காஞ்சிபுரம் ஓரிக்கையை சேர்ந்த மோகேஷ் (21) என்பவரை கைது செய்தனர்.
    Next Story
    ×