search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விளை நிலங்களில் இறால் குட்டைகள் வெட்டப்பட்டு உப்பு நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    விளை நிலங்களில் இறால் குட்டைகள் வெட்டப்பட்டு உப்பு நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    இறால் குட்டைகளை தடை செய்து நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும் - கலெக்டருக்கு, பொதுமக்கள் கோரிக்கை

    திருகருகாவூர் கிராமத்தில் இறால் குட்டைகளை தடை செய்து, நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கொள்ளிடம்:

    நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள திருகருகாவூர் கிராமத்தில் 1,500 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் நிலத்தடி நீர் நல்ல தண்ணீராக இருப்பதால் அந்த கிராம மக்கள் காலம் காலமாக குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் நிலத்தடி நீரையே பயன்படுத்தி வந்தனர். இந்த கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு வந்தது இல்லை.

    இந்தநிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக படிப்படியாக இறால் குட்டைகள் வெட்டப்பட்டு அவற்றில் உப்பு நீரை தேக்கி இறால் வளர்ப்பில் சிலர் ஈடுபட்டு வந்தனர். இதனால் 80 ஏக்கர் விளை நிலங்கள் இறால் குட்டைகளாக மாறி உள்ளன. அதனை சார்ந்துள்ள 300 ஏக்கர் விளை நிலங்கள் உவர் நிலங்களாக மாறியதால் நெற்பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி விட்டதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    எனவே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை மட்டுமே திருகருகாவூர், வடகால், கடவாசல், எடமணல், கீராநல்லூர், வெள்ளப்பள்ளம், கிளாக்தோப்பு உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். போதிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நாகை கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், குடிநீர் தட்டுப்பாட்டுக்கும், விவசாய நிலங்கள் பயனின்றி போவதற்கும் காரணமாக இருந்து வரும் இறால் குட்டைகளை தடை செய்து, நிலத்தடி நீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிகை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×