search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காட்டுமன்னார்கோவிலில் லாட்டரி விற்ற வாலிபர் கைது

    காட்டுமன்னார்கோவிலில் லாட்டரி விற்றபனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காட்டுமன்னார்கோவில்:

    காட்டுமன்னார்கோவிலில் உள்ள பெரியகுளம் பகுதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காட்டுமன்னார்கோவில் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் பெரியகுளம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். 

    அப்போது அங்கு ஆன்லைனில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த காட்டுமன்னார்கோவில் இந்திரா நகரை சேர்ந்த ராகுல் (வயது 27) என்பவரை போலீசார் பிடிக்க முயன்றனர். இதில் அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீசாரை தாக்க முயன்றார். இதில் சுதாரித்துக் கொண்ட போலீசார் ராகுலை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
    Next Story
    ×