search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கொரோனா ஊரடங்கால் வியாபாரம் பாதிப்பு- பெண் தற்கொலை

    கொரோனா ஊரடங்கால் வியாபாரம் பாதிப்படைந்ததால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ஜீவாநகரை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி வீரலட்சுமி (வயது 31). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் பழைய இரும்புக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். கொரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக பழைய இரும்பு கடையில் சரிவர வியாபாரம் ஆகவில்லை என கூறப்படுகிறது. இதனால் மகள்களை எப்படி படிக்க வைப்பது? என வீரலட்சுமி புலம்பி வந்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த வீரலட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதனால் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அதன் பின்னர் அங்கிருந்து வீரலட்சுமி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் வீரலட்சுமி இறந்தார்.

    இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×