என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேர்வு எழுதாத பிளஸ்-2 மாணவர்களுக்கு மீண்டும் 27ந் தேதி தேர்வு- அமைச்சர் செங்கோட்டையன்
Byமாலை மலர்17 July 2020 6:55 AM GMT (Updated: 17 July 2020 6:55 AM GMT)
ஏற்கனவே தேர்வு எழுத முடியாத பிளஸ்-2 மாணவர்களுக்கு மீண்டும் 27-ந் தேதி தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு:
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்து உள்ளன. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தேர்வு முடிவுகள் வெளி வந்ததால், ஏற்கனவே தேர்வு எழுத முடியாமல் இருந்த மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை. ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 27-ந் தேதி தேர்வு நடைபெறும். மொத்தமாக தேர்வு எழுதாத மாணவர்கள் என்று பார்த்தால் 34 ஆயிரத்து 842 பேர் உள்ளனர். மொத்தம் உள்ள 6 தேர்வுகளில் ஒரே ஒரு தேர்வு மட்டும் எழுதியவர்களும் இதில் உள்ளனர். அவர்களும் இந்த புதிய அட்டவணைப்படி தங்கள் தேர்வுகளை எழுதலாம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசும், பள்ளிக்கல்வித்துறையும் செய்து இருக்கிறது.
இவர்களுக்கு தேவையான தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்படும். 6 தேர்வுகளும் எழுதும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் உடனடியாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இந்த நடவடிக்கையானது அனைத்து மாணவ-மாணவிகள், பெற்றோர்களின் நலன் கருதி எடுக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 பொதுத்தேர்வுகள் முழுமையாக நிறைவடையாததால் அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்து உள்ளன. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தேர்வு முடிவுகள் வெளி வந்ததால், ஏற்கனவே தேர்வு எழுத முடியாமல் இருந்த மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை. ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 27-ந் தேதி தேர்வு நடைபெறும். மொத்தமாக தேர்வு எழுதாத மாணவர்கள் என்று பார்த்தால் 34 ஆயிரத்து 842 பேர் உள்ளனர். மொத்தம் உள்ள 6 தேர்வுகளில் ஒரே ஒரு தேர்வு மட்டும் எழுதியவர்களும் இதில் உள்ளனர். அவர்களும் இந்த புதிய அட்டவணைப்படி தங்கள் தேர்வுகளை எழுதலாம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசும், பள்ளிக்கல்வித்துறையும் செய்து இருக்கிறது.
இவர்களுக்கு தேவையான தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்படும். 6 தேர்வுகளும் எழுதும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் உடனடியாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இந்த நடவடிக்கையானது அனைத்து மாணவ-மாணவிகள், பெற்றோர்களின் நலன் கருதி எடுக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 பொதுத்தேர்வுகள் முழுமையாக நிறைவடையாததால் அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X