search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செங்கோட்டையன்
    X
    அமைச்சர் செங்கோட்டையன்

    தேர்வு எழுதாத பிளஸ்-2 மாணவர்களுக்கு மீண்டும் 27ந் தேதி தேர்வு- அமைச்சர் செங்கோட்டையன்

    ஏற்கனவே தேர்வு எழுத முடியாத பிளஸ்-2 மாணவர்களுக்கு மீண்டும் 27-ந் தேதி தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
    ஈரோடு:

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்து உள்ளன. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தேர்வு முடிவுகள் வெளி வந்ததால், ஏற்கனவே தேர்வு எழுத முடியாமல் இருந்த மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை. ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 27-ந் தேதி தேர்வு நடைபெறும். மொத்தமாக தேர்வு எழுதாத மாணவர்கள் என்று பார்த்தால் 34 ஆயிரத்து 842 பேர் உள்ளனர். மொத்தம் உள்ள 6 தேர்வுகளில் ஒரே ஒரு தேர்வு மட்டும் எழுதியவர்களும் இதில் உள்ளனர். அவர்களும் இந்த புதிய அட்டவணைப்படி தங்கள் தேர்வுகளை எழுதலாம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசும், பள்ளிக்கல்வித்துறையும் செய்து இருக்கிறது.

    இவர்களுக்கு தேவையான தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்படும். 6 தேர்வுகளும் எழுதும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் உடனடியாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இந்த நடவடிக்கையானது அனைத்து மாணவ-மாணவிகள், பெற்றோர்களின் நலன் கருதி எடுக்கப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 பொதுத்தேர்வுகள் முழுமையாக நிறைவடையாததால் அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×