என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசுப்பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளுக்கு அரிசி, பருப்பு வினியோகம்
Byமாலை மலர்16 July 2020 8:12 AM GMT (Updated: 16 July 2020 8:12 AM GMT)
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் வரை சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு அடங்கிய பை வழங்கப்பட்டு வருகிறது.
வேலூர்:
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளில் சத்துணவு சாப்பிடும் நபர்களுக்கு அரிசி, பருப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்காக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டன. மாணவர்கள் பள்ளி அடையாள அட்டையுடன் பெற்றோருடன் வந்து அரிசி, பருப்பு பொருட்கள் வாங்கி செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் வரை சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு கடந்த 13-ந்தேதி முதல் அரிசி, பருப்பு அடங்கிய பை வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சத்துணவுத்திட்ட அதிகாரிகள் கூறுகையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 394 பேருக்கு அரிசி, பருப்பு அடங்கிய பை வழங்கப்பட உள்ளது. 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களுக்கு 3 கிலோ அரிசி, 1 கிலோ 200 கிராம் பருப்பு, 6 முதல் 8 வரை படிக்கும் மாணவர்களுக்கு 4 கிலோ 650 கிராம் அரிசி, 1 கிலோ 250 கிராம் பருப்பு வழங்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளில் சத்துணவு சாப்பிடும் நபர்களுக்கு அரிசி, பருப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்காக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டன. மாணவர்கள் பள்ளி அடையாள அட்டையுடன் பெற்றோருடன் வந்து அரிசி, பருப்பு பொருட்கள் வாங்கி செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் வரை சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு கடந்த 13-ந்தேதி முதல் அரிசி, பருப்பு அடங்கிய பை வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சத்துணவுத்திட்ட அதிகாரிகள் கூறுகையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 394 பேருக்கு அரிசி, பருப்பு அடங்கிய பை வழங்கப்பட உள்ளது. 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களுக்கு 3 கிலோ அரிசி, 1 கிலோ 200 கிராம் பருப்பு, 6 முதல் 8 வரை படிக்கும் மாணவர்களுக்கு 4 கிலோ 650 கிராம் அரிசி, 1 கிலோ 250 கிராம் பருப்பு வழங்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X