search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்ச்சல் பரிசோதனை
    X
    காய்ச்சல் பரிசோதனை

    தூய்மை பணியாளர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை

    கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.
    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பணியை தொடங்கும் முன்பு வெப்பமானி கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதில் தூய்மை பணியாளர்கள் 74 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் 12 பேருக்கும், அலுவலகத்துக்கு வீட்டுவரி மற்றும் குடிநீர் வரி கட்ட வந்த பொதுமக்கள் 5 பேருக்கும் வெப்பமானி கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.

    கொரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்களை கண்டறிந்து, உடனடியாக மருத்துவ நடவடிக்கை எடுக்கும் வகையில் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி அலுவலகத்துக்கு 35 வெப்பமானி கருவிகள் வந்துள்ளன. இனிமேல் பேரூராட்சி அலுவலகத்துக்கு வரும் அனைவரும், பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×