search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மணல்மேடு அருகே சாராயம் விற்றவர் கைது

    மணல்மேடு அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மணல்மேடு:

    மணல்மேடு அருகே உள்ள வல்லம் கிராமம் முட்டம் பாலம் அருகே சாராயம் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி மற்றும் போலீசார், அங்கு சென்று கண்காணித்தபோது வல்லம் காலனி தெருவை சேர்ந்த பாலா (வயது55) என்பவர் சாராயம் விற்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×