என் மலர்
செய்திகள்

கைது
மணல் கடத்தல்- 2 பேர் கைது
காஞ்சிபுரம் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ஓரிக்கை பாலாறு அருகே மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலைக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி அவரது மேற்பார்வையில், காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப்இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் ஆகியோர் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 6 மூட்டைகளில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதையொட்டி காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 28), அதே பகுதியை சேர்ந்த விஜய் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மேட்டார் சைக்கிள்கள் மற்றும் மணல் மூட்டைகளை போலீசார் கைப்பற்றினர்.
காஞ்சிபுரம் ஓரிக்கை பாலாறு அருகே மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலைக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி அவரது மேற்பார்வையில், காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப்இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் ஆகியோர் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 6 மூட்டைகளில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதையொட்டி காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 28), அதே பகுதியை சேர்ந்த விஜய் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மேட்டார் சைக்கிள்கள் மற்றும் மணல் மூட்டைகளை போலீசார் கைப்பற்றினர்.
Next Story






