என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    காதலியை கரம்பிடிக்க இருந்த நிலையில் கோவை டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை

    காதலியை கரம்பிடிக்க இருந்தநிலையில் கோவையில் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த துக்கம் தாங்காமல் அவருடைய காதலியும் தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே உள்ள கம்மங்காட்டுகளம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் கேசவன் (வயது 28). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.

    இதேபோல் ஊஞ்சலூர் அருகில் உள்ள நடுப்பாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் கிருத்திகா (25). பி.ஏ. முடித்து உள்ளார். இவர் கேசவன் வேலை செய்த அதே தனியார் ஆஸ்பத்திரியின் ஈரோடு கிளையில் உதவியாளராக வேலை செய்து வந்தார்.

    கேசவனும், கிருத்திகாவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்து உள்ளனர். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேசவனிடம் கிருத்திகா கூறினார். இதற்கு கேசவன் தன்னுடைய வீட்டில் திருமணத்துக்கு சம்மதிக்க மாட்டார்கள். எனவே நாம் திருமணம் செய்து கொண்டு பின்னர் எங்களுடைய வீட்டில் தெரிவித்து கொள்ளலாம் என கூறி உள்ளார்.

    இதைத்தொடர்ந்து கிருத்திகாவின் பெற்றோர் சம்மதத்துடன் கிளாம்பாடியில் உள்ள ஒரு கோவிலில் கடந்த 3-ந் தேதி அன்று அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. ஆனால் திருமணநாளில் கேசவன் வரவில்லை என தெரிகிறது. இதனால் திருமணம் நின்று போனது. இதன்காரணமாக கிருத்திகா மிகவும் ஏமாற்றம் அடைந்தார்.

    இதற்கிடையில் நேற்று முன்தினம் கோவையில் கேசவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் கிருத்திகா மிகவும் மனமுடைந்தார். மேலும் கிருத்திகாவின் பெற்றோரும் அவருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் சிறிது நேரத்தில் கிருத்திகாவின் பெற்றோர் வீட்டை வீட்டு வெளியே சென்று உள்ளனர்.

    தூக்குப்போட்டு காதலன் தற்கொலை செய்து கொண்ட துயரத்தில் இருந்த கிருத்திகா இனி வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். வீட்டில் யாரும் இல்லாததால் உடைந்த கண்ணாடியை எடுத்து கிருத்திகா தனது கையை அறுத்து கொண்டார். பின்னர் வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் மலையம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிருத்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலன் இறந்த துயரத்தில் காதலியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஊஞ்சலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    Next Story
    ×