என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வினியோகம்
Byமாலை மலர்9 Jun 2020 6:31 AM GMT (Updated: 9 Jun 2020 6:32 AM GMT)
புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் படித்து வரும் பள்ளிகளிலேயே ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 15-ந்தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளில் ஈடுபடுவதற்காக அனைத்து ஆசிரியர்களையும் பணிக்கு திரும்ப கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, 75 நாட்களுக்கு பிறகு நேற்று ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் நேற்று ஹால் டிக்கெட் மற்றும் முககவசங்களை வாங்குவதற்காக அந்தந்த பள்ளிகளில் வந்திருந்தனர்.
பள்ளிக்கு வந்திருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முககவசம் அணிந்திருந்தால் மட்டுமே வளாகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதுமட்டுமில்லாமல் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது.
பின்னர் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. அப்போது அதனுடன் சேர்த்து ஒவ்வொரு மாணவருக்கும் 2 முக கவசங்கள் வழங்கப்பட்டன. வருகிற 19-ந்தேதி மேலும் ஒரு முக கவசமும் வழங்கப்பட இருக்கிறது. முக கவசங்கள் மற்றும் ஹால் டிக்கெட்டுகளை சமூக இடைவெளியை கடைப்பிடிக்கச் செய்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்கினர். தேர்வுக்கு எப்படி தயாராக வேண்டும்? தேர்வு நாளன்று எப்படி வரவேண்டும்? என்பன போன்ற அறிவுரைகளையும் தெரிவித்தனர்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 15-ந்தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளில் ஈடுபடுவதற்காக அனைத்து ஆசிரியர்களையும் பணிக்கு திரும்ப கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, 75 நாட்களுக்கு பிறகு நேற்று ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் நேற்று ஹால் டிக்கெட் மற்றும் முககவசங்களை வாங்குவதற்காக அந்தந்த பள்ளிகளில் வந்திருந்தனர்.
பள்ளிக்கு வந்திருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முககவசம் அணிந்திருந்தால் மட்டுமே வளாகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதுமட்டுமில்லாமல் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது.
பின்னர் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. அப்போது அதனுடன் சேர்த்து ஒவ்வொரு மாணவருக்கும் 2 முக கவசங்கள் வழங்கப்பட்டன. வருகிற 19-ந்தேதி மேலும் ஒரு முக கவசமும் வழங்கப்பட இருக்கிறது. முக கவசங்கள் மற்றும் ஹால் டிக்கெட்டுகளை சமூக இடைவெளியை கடைப்பிடிக்கச் செய்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்கினர். தேர்வுக்கு எப்படி தயாராக வேண்டும்? தேர்வு நாளன்று எப்படி வரவேண்டும்? என்பன போன்ற அறிவுரைகளையும் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X