என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    கோபி அருகே மின்சாரம் தாக்கி பெண் மயில்கள் பலி

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே மின்சாரம் தாக்கி 2 பெண் மயில்கள் பலியானது.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பவளமலை செல்வபுரம் பகுதிக்கு ஏராளமான மயில்கள் இறை தேடி வந்து செல்வது வழக்கம். அது போல் இன்று காலை 2 பெண் மயில்கள் வந்தது.

    பின்னர் மயில்கள் மேலே பறக்க முயன்ற போது அங்குள்ள மின் கம்பியில் உரசி மின்சாரம் தாக்கி 2 பெண் மயில்களும் இறந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் டி.என். பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×