என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சிபுரம் அருகே கத்திமுனையில் ரூ.81 ஆயிரம் பறிப்பு
Byமாலை மலர்6 Jun 2020 1:15 PM GMT (Updated: 6 Jun 2020 1:15 PM GMT)
காஞ்சிபுரம் அருகே கத்திமுனையில் ரூ.81 ஆயிரம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 22). இவர் காஞ்சிபுரம் சாலை தெருவில் உள்ள ஒரு வங்கிக்கு வந்து நகையை அடமானம் வைத்தார். நகை அடமானம் வைத்த ரூ.81 ஆயிரத்தை வாங்கி கொண்டு வெளியே வந்த அவர் மாமனார் மேகநாதனுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் ஐஸ்வர்யாவின் மாமியார் ஜெயந்தியும் அமர்ந்திருந்தார்.
காஞ்சிபுரம் அம்பாள் நகர் சந்திப்பு அருகே செல்லும்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் மேகநாதன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி ஐஸ்வர்யாவை கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 81 ஆயிரத்தை பறித்து சென்றனர்.
இது குறித்து ஐஸ்வர்யா, பெரிய காஞ்சிபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து கத்திமுனையில் பணத்தை பறித்து சென்ற 2 பேரை தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 22). இவர் காஞ்சிபுரம் சாலை தெருவில் உள்ள ஒரு வங்கிக்கு வந்து நகையை அடமானம் வைத்தார். நகை அடமானம் வைத்த ரூ.81 ஆயிரத்தை வாங்கி கொண்டு வெளியே வந்த அவர் மாமனார் மேகநாதனுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் ஐஸ்வர்யாவின் மாமியார் ஜெயந்தியும் அமர்ந்திருந்தார்.
காஞ்சிபுரம் அம்பாள் நகர் சந்திப்பு அருகே செல்லும்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் மேகநாதன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி ஐஸ்வர்யாவை கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 81 ஆயிரத்தை பறித்து சென்றனர்.
இது குறித்து ஐஸ்வர்யா, பெரிய காஞ்சிபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து கத்திமுனையில் பணத்தை பறித்து சென்ற 2 பேரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X