என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
புதுச்சேரி:
புதுவை குரும்பாபேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணபதி (வயது40) கட்டிட தொழிலாளி. இவருக்கு ராதிகா என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
கணபதிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் அவர் சரியாக வேலைக்கும் செல்வதில்லை. இதனால் ராதிகா அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். ஆனாலும் குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாததால் ராதிகா சிலரிடம் பணம் கடன் வாங்கியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணபதி குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது ஏற்கனவே கடன் இருக்கும் போது இப்படி குடித்துவிட்டு வருகிறீர்களே என அவரது மனைவி கண்டித்தார். மனைவி கண்டித்ததால் கணபதி வேதனையடைந்து சாப்பிடாமல் வீட்டின் மாடிக்கு சென்றார்.
கோபம் தணிந்து சிறிது நேரம் கழித்து கணவர் சாப்பிட வருவார் என ராதிகா எதிர்பார்த்து இருந்தார். ஆனால் கணபதி வெகுநேரமாக வராததால் சந்தேகமடைந்து மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது இரும்பு பைப்பில் துப்பட்டாவால் கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு ராதிகா அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து கணபதியை மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கணபதி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்