என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை, திருப்பூரில் இருந்து மேலும் 5 சிறப்பு ரெயில்கள் இன்று இயக்கம்
Byமாலை மலர்4 Jun 2020 12:32 PM GMT (Updated: 4 Jun 2020 12:32 PM GMT)
கோவை, திருப்பூரில் இருந்து மேலும் 5 சிறப்பு ரெயில்கள் இன்று இயக்கப்படுகின்றன.
ஊட்டி:
திருப்பூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் உள்ளன. இங்கு வடமாநிலம் மற்றும் தென்மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக பனியன் நிறுவனங்கள் மூடப்பட்டதால் வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் வேலை இழந்து வருமானம் இன்றி தவித்தனர்.
இதையடுத்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 27 ரெயில்கள் மூலம் 42 ஆயிரத்து 400 பேரும், பஸ், கார் மூலமாக 10, 600 பேர் என மொத்தம் 53 ஆயிரம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
இன்று திருப்பூரில் இருந்து வடமாநிலங்களுக்கு 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி பகல் 12 மணிக்கு பீகாருக்கும், 2 மணிக்கு மேற்கு வங்காளத்துக்கும், மாலை 6 மணிக்கு உத்தரபிரதேசத்துக்கும், இரவு 10 மணியளவில் ஒடிசாவுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த ரெயில்களில் தலா 1,600 பேர் வீதம் மொத்தம் 6 ஆயிரத்து 400 பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
இதற்காக திருப்பூரின் வெவ்வேறு பகுதிகளில் தங்கி வேலை பார்த்த வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் ஜெய்வாய்பாய் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் 8-ந் தேதி முதல் வடமாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை இயக்கப்பட்ட 32 ரெயில்கள் மூலம் 44 ஆயிரம் வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
இதற்கிடையே இன்று மதியம் 2 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதில் ஊட்டியில் தங்கி வேலை பார்த்து வரும் 300 பேர், கோவையை சேர்ந்த 300 பேர் என 600 பேர் பயணிக்கின்றனர். முன்னதாக அவர்கள் அனைவரும் பஸ் மூலம் ரெயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் அவர்கள் ரெயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
திருப்பூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் உள்ளன. இங்கு வடமாநிலம் மற்றும் தென்மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக பனியன் நிறுவனங்கள் மூடப்பட்டதால் வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் வேலை இழந்து வருமானம் இன்றி தவித்தனர்.
இதையடுத்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 27 ரெயில்கள் மூலம் 42 ஆயிரத்து 400 பேரும், பஸ், கார் மூலமாக 10, 600 பேர் என மொத்தம் 53 ஆயிரம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
இன்று திருப்பூரில் இருந்து வடமாநிலங்களுக்கு 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி பகல் 12 மணிக்கு பீகாருக்கும், 2 மணிக்கு மேற்கு வங்காளத்துக்கும், மாலை 6 மணிக்கு உத்தரபிரதேசத்துக்கும், இரவு 10 மணியளவில் ஒடிசாவுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த ரெயில்களில் தலா 1,600 பேர் வீதம் மொத்தம் 6 ஆயிரத்து 400 பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
இதற்காக திருப்பூரின் வெவ்வேறு பகுதிகளில் தங்கி வேலை பார்த்த வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் ஜெய்வாய்பாய் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் 8-ந் தேதி முதல் வடமாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை இயக்கப்பட்ட 32 ரெயில்கள் மூலம் 44 ஆயிரம் வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
இதற்கிடையே இன்று மதியம் 2 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதில் ஊட்டியில் தங்கி வேலை பார்த்து வரும் 300 பேர், கோவையை சேர்ந்த 300 பேர் என 600 பேர் பயணிக்கின்றனர். முன்னதாக அவர்கள் அனைவரும் பஸ் மூலம் ரெயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் அவர்கள் ரெயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X