என் மலர்
செய்திகள்

கொலை
புதுக்கோட்டையில் 13 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்
கந்தர்வகோட்டை அருகே உள்ள தைல மரக்காட்டில் 13 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக தந்தை, உறவினரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தைல மரக்காட்டில் 14 வயது சிறுமி மயங்கிய நிலையில் கிடந்தாள்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (வயது 55), இவரது மனைவி இந்திரா. இவர்களது மகள் வித்யா (13). தச்சங்குறிச்சியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த அவர் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் வீட்டில் இருந்து வந்தார்.
மே 18-ந்தேதி அன்று வித்யா அவரது சகோதரியுடன் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பிடாரி கோவில் குளத்தில் உள்ள ஊற்றில் தண்ணீர் எடுக்க சென்றார். வித்யா முதலில் செல்ல, அதன்பிறகு அவரது சகோதரி சென்றுள்ளார். பிடாரி கோவில் குளத்திற்கு சென்று பார்த்த போது அங்கு வித்யாவை காணவில்லை. இதனால் அவர் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். பெற்றோரும் உறவினர்களும் வித்யாவை தேடினர். அப்போது பாப்பான்குளம் அருகே தைலமரக்காட்டு பகுதியில் வித்யா ஆடைகள் களைந்து அலங்கோலமான நிலையில் கிடந்தார். முகத்தில் பலத்த காயம் இருந்ததுடன், கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் மூச்சு திணறியபடி கிடந்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிய வித்யாவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து இவ்வழக்கில் திடீர் திருப்பமாக சிறுமியின் தந்தை மற்றும் உறவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிறுமியை நரபலி கொடுத்தால் சொத்துக்கள் பெருகும் என்ற மந்திரவாதியின் பேச்சை கேட்டு மகளை நரபலி கொடுத்ததாக தந்தை பன்னீர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் இவருக்கு உடந்தையாக இருந்த உறவினர் குமாரையும் போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவான மந்திரவாதியை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தைல மரக்காட்டில் 14 வயது சிறுமி மயங்கிய நிலையில் கிடந்தாள்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (வயது 55), இவரது மனைவி இந்திரா. இவர்களது மகள் வித்யா (13). தச்சங்குறிச்சியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த அவர் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் வீட்டில் இருந்து வந்தார்.
மே 18-ந்தேதி அன்று வித்யா அவரது சகோதரியுடன் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பிடாரி கோவில் குளத்தில் உள்ள ஊற்றில் தண்ணீர் எடுக்க சென்றார். வித்யா முதலில் செல்ல, அதன்பிறகு அவரது சகோதரி சென்றுள்ளார். பிடாரி கோவில் குளத்திற்கு சென்று பார்த்த போது அங்கு வித்யாவை காணவில்லை. இதனால் அவர் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். பெற்றோரும் உறவினர்களும் வித்யாவை தேடினர். அப்போது பாப்பான்குளம் அருகே தைலமரக்காட்டு பகுதியில் வித்யா ஆடைகள் களைந்து அலங்கோலமான நிலையில் கிடந்தார். முகத்தில் பலத்த காயம் இருந்ததுடன், கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் மூச்சு திணறியபடி கிடந்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிய வித்யாவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து இவ்வழக்கில் திடீர் திருப்பமாக சிறுமியின் தந்தை மற்றும் உறவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிறுமியை நரபலி கொடுத்தால் சொத்துக்கள் பெருகும் என்ற மந்திரவாதியின் பேச்சை கேட்டு மகளை நரபலி கொடுத்ததாக தந்தை பன்னீர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் இவருக்கு உடந்தையாக இருந்த உறவினர் குமாரையும் போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவான மந்திரவாதியை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story






