என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா - டாக்டருக்கும் நோய் தொற்று உறுதி
Byமாலை மலர்31 May 2020 9:58 AM GMT (Updated: 31 May 2020 9:58 AM GMT)
புதுவையில் இன்று ஒரே நாளில் புதிதாக 9 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் 2 வாரங்களுக்கு முன்பு வரை ஒற்றை இலக்க எண்களிலேயே கொரோனா நோயாளிகள் இருந்து வந்தனர். மேலும் நோய் பரவுதலும் எப்போதாவதுதான் ஏற்பட்டது.
ஆனால், கோயம்பேடு சந்தைக்கு சென்று திரும்பிய சிலரால் நோய் தொற்று அதிகரிக்க தொடங்கியது.
அதன்பிறகு தொடர்ந்து ஒவ்வொரு நாளும் யாருக்காவது நோய் தொற்று ஏற்பட்டது. இப்போது தினமும் அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது.
நேற்று புதிதாக கர்ப்பிணி பெண், வங்கி ஊழியர் உள்பட 4 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று புதிதாக 9 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் வெளியிட்டார்.
புதுவையில் மேலும் 9 பேருக்கு கோரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த 2 பேருக்கும், ஜிப்மர் குடி யிருப்பில் வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவருக்கும், கொரோனா வார்டில் சிகிச்சை அளித்த டாக்டர் ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் அன்னை தெரேசா நகரை சேரந்த ஒரு நபருக்கும், திலகர் நகரை சேர்ந்த ஒருவருக்கும் கொம்பாக்கத்தை சேர்ந்த 65 வயது முதியவருக்கும், பெரிய கோட்டக்குப்பம், வடமங்கலம் பகுதியை சேர்ந்த தலா ஒருவருக்கும கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில், 4 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், 4 பேர் 25 வயதிற்கு உட்பட்டவர்கள், ஒருவர் 37 வயதை உடையவர். இவர்களுடன் சேர்த்து கதிர்காமம் கொரோனா மருத்துவமனையில் 35 பேரும், ஜிப்மரில் 9 பேரும், சேலத்தில் புதுவையை சேர்ந்த பெண்மணி ஒரு வரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று குருமாம்பேட்டை சேர்ந்த ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். இதுவரை கொரேனாவால் 70 பேர் புதுவையில் பாதிக்கப்பட்டுள்ளனர்,
புதுவையில் இதுவரை 13 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக இருந்து வந்தது. இன்று 7 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உத்தரவின்படி இந்த பகுதிகளில் ஜூன் 30-ந்தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும். மத்திய அரசு மேலும் சில தளர்வுகள் அறிவித்துள்ளது.
இதனால் வெளியில் செல்லும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் முககவசம், கிருமிநாசினி ஆகியவற்றை உபயோகப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதுவையில் 2 வாரங்களுக்கு முன்பு வரை ஒற்றை இலக்க எண்களிலேயே கொரோனா நோயாளிகள் இருந்து வந்தனர். மேலும் நோய் பரவுதலும் எப்போதாவதுதான் ஏற்பட்டது.
ஆனால், கோயம்பேடு சந்தைக்கு சென்று திரும்பிய சிலரால் நோய் தொற்று அதிகரிக்க தொடங்கியது.
அதன்பிறகு தொடர்ந்து ஒவ்வொரு நாளும் யாருக்காவது நோய் தொற்று ஏற்பட்டது. இப்போது தினமும் அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று புதிதாக 9 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் வெளியிட்டார்.
புதுவையில் மேலும் 9 பேருக்கு கோரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த 2 பேருக்கும், ஜிப்மர் குடி யிருப்பில் வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவருக்கும், கொரோனா வார்டில் சிகிச்சை அளித்த டாக்டர் ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் அன்னை தெரேசா நகரை சேரந்த ஒரு நபருக்கும், திலகர் நகரை சேர்ந்த ஒருவருக்கும் கொம்பாக்கத்தை சேர்ந்த 65 வயது முதியவருக்கும், பெரிய கோட்டக்குப்பம், வடமங்கலம் பகுதியை சேர்ந்த தலா ஒருவருக்கும கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில், 4 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், 4 பேர் 25 வயதிற்கு உட்பட்டவர்கள், ஒருவர் 37 வயதை உடையவர். இவர்களுடன் சேர்த்து கதிர்காமம் கொரோனா மருத்துவமனையில் 35 பேரும், ஜிப்மரில் 9 பேரும், சேலத்தில் புதுவையை சேர்ந்த பெண்மணி ஒரு வரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று குருமாம்பேட்டை சேர்ந்த ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். இதுவரை கொரேனாவால் 70 பேர் புதுவையில் பாதிக்கப்பட்டுள்ளனர்,
புதுவையில் இதுவரை 13 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக இருந்து வந்தது. இன்று 7 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உத்தரவின்படி இந்த பகுதிகளில் ஜூன் 30-ந்தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும். மத்திய அரசு மேலும் சில தளர்வுகள் அறிவித்துள்ளது.
இதனால் வெளியில் செல்லும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் முககவசம், கிருமிநாசினி ஆகியவற்றை உபயோகப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X